தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கு இடைக்கால தடை!

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 19ம் தேதி, திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இந்த மாநாட்டிற்கு இரண்டு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, இந்த மாநாட்டிற்கு இடைக்கால தடை அடுத்த 14(பிப்.29 வரை) நாட்கள் தொடரும் என குறிப்பிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணை மீண்டும் பிப்ரவரி 29ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!