இலங்கையில் தொலைப்பேசி கொள்வனவு செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..

கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்யும் போது அவதானிக்க வேண்டிய சில விடயங்கள் பற்றி அறிவுறுத்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொள்வனவு செய்யப்படும் தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அந்த ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனை ஆராய்வதற்காக, IMEI என டைப் செய்து இடைவெளி விட்டு, 15 இலக்க IMEI எண்ணை டைப் செய்து அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறும் அவர் கோரியுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!