லங்கா சதோச நிறுவனத்திற்கு 10 மில்லியன் முட்டைகள் வெளியிடப்படும் என தகவல்..

லங்கா சதோச நிறுவனத்திற்கு 10 மில்லியன் முட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (18) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரம் உறுதி செய்யப்பட்டுள்ள 10 மில்லியன் முட்டைகளை இவ்வாறு வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பண்டிகை காலத்துக்கு தேவையான 15 மில்லியன் முட்டைகள் நாளை (17) நாட்டிற்கு கொண்டு வரப்படும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் குறித்த முட்டைகள் சந்தைக்கு வெளியிடப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!