அஸ்வெசும விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களின் பரிசீலனைகள் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்டமாக 75,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். அந்தவகையில், அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் கணக்கிடப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 34 இலட்சம் ஆகும்.

அதில் 18 இலட்சம் பேர் அஸ்வெசுமவின் பலன்களுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்றும் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் அஸ்வெசும விண்ணப்பங்களை ஏற்கும் காலம் கடந்த 13ம் திகதியுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!