ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

ஊடகமொன்றில் நடத்தப்பட்ட நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சாத்தியகூறுகளும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, ஜனாதிபதி தேர்தலானது எந்தவொரு சந்தரப்பத்திலும் பிற்போடப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!