விடுமுறையை கொண்டாட அவுஸ்திரேலியா சென்ற இந்தியர்கள் கடலில் மூழ்கி பலி

அவுஸ்திரேலியாவின் தீவுப்பகுதிக்கு சுற்றுலா சென்ற 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் அவுஸ்திரலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

விடுமுறையை கொண்டாட சென்ற அவர்கள், விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவுப்பகுதியில் கடலில் குளித்துள்ளனர்.

அப்போது 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த தகவலை இந்திய தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!