மாலத்தீவை இந்தியர்கள் புறக்கணியுங்கள் – பிரபல நடிகர்

மாலத்தீவுக்கு செல்வதை இந்தியர்களாகிய நாம் புறக்கணிக்க வேண்டும் என நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு சென்ற புகைப்படங்களை பதிவிட்டு, இந்தியர்கள் இங்கு சுற்றுலாவுக்கு வந்து மேம்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அவரது இந்த பதிவிற்கு மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியூனை வெறுப்புணர்வை வெளிக்காட்டும் வகையில் கருத்து கூறினார்.

இதனால் மாலத்தீவு நெட்டிசன்கள் இந்தியர்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர்.

இந்த விடயம் சமூக வலைதளத்தில் புயலை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டுள்ள பதிவில்,

‘இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துக்களை அனுப்பும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய பொது நபர்களின் கருத்துக்களைப் பார்த்தேன்.

அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டிற்கு இப்படி செய்வது ஆச்சரியமாக இருக்கிறது.

அண்டை வீட்டார்களிடம் நாம் நல்லவர்கள் தான், ஆனால் இத்தகைய தூண்டப்படாத வெறுப்பை நாம் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?

நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். எப்போதும் அதைப் பாராட்டினேன், ஆனால் கண்ணியம் தான் முதன்மையானது.

இந்திய தீவுகளை ஆராய்ந்து நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!