இந்தியா WC வெல்லும்! சத்தியம் செய்யும் ஜெய் ஷா

இந்த முறை டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின்(பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா சத்தியம் செய்துள்ளார்.

ஐசிசி நடத்தும் போட்டிகளில் கடந்த 2013ம் ஆண்டும் சாம்பியன் டிராபி கோப்பையை வென்ற இந்திய அணி, அதன்பின் ஒரு ஐசிசி கோப்பைகளைகூட வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.

நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, இறுதிப்போட்டியில் கோட்டைவிட்டது.

இதனால், இந்திய ரசிகர்கள் கடும் அப்செட் ஆகினர். இருப்பினும் ரோகித்தின் கேப்டன்சிப் சிறப்பாக இருந்ததால், அவர் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஆனால், இது குறித்து பிசிசிஐ வாய் திறக்காமல் இருந்தது. இந்நிலையில், குஜராத்தில் கிரிக்கெட் தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “50 ஓவர் உலகக் கோப்பையில் கோப்பையை கைவிட்டாலும், ரசிகர்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்துள்ளோம். ஆனால், இந்த முறை டி20 உலகக் கோப்பையை விடமாட்டோம். ரசிகர்களுக்கு ஒரு சத்தியம் செய்கிறேன். டி20 உலகக்கோப்பை நமக்குதான். ரோகித் தலைமையிலான அணி அதை செய்யும்” என உறுதிபட கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர், ஐபிஎல் சேர்மன் அருண் துமால், கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவாஸ்கர், அணில் கும்ப்ளே உள்ளிட்டோர் இருந்தனர்.

மேலும், டி20 உலகக் கோப்பைக்கு ரோகித்தான் கேப்டன் என்பதையும் ஜெய்ஷா தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் கேப்டன் குழப்பமும் முடிவுக்கு வந்துள்ளது.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!