சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்: 5 பேருக்கு தடை

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்தும் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள 5 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சார்பாக இன்று(பிப்.4), இன்று கிளிநொச்சியில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இந்த போராட்டத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயற்பாட்டாளர்களான லீலாதேவி, கலாரஞ்சினி, கோகிலவாணி, சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் ஆகிய 5 பேர் பங்கேற்க கூடாது என பொலிசாரால் தடை பெறப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு கிளிநொச்சி நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!