யாழில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து ஆணொருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வீட்டில் வசித்து வந்தநிலையில் குறித்த நபரின் மகன் இன்றைய தினம் வீட்டிற்கு வந்துள்ளார் .
வீட்டின் அறைக்குள் சென்றபோது தந்தை உருக்குலைந்த நிலையில் சடலாமா கிடந்துள்ளார்.
இந்நிலையில் மகன் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .
இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.