வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு பணிகளை உடனடியாக தாமதமின்றி செய்யும்படி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். வரும் பெப்ரவரி 29ம் தேதிக்கு முன்னர் இது தொடர்பான பணிகளை முடித்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

திருமணம், கல்வி அல்லது வேறு காரணங்களுக்காக இருப்பிடத்தை மாற்றியவர்களும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!