இலங்கையில் 200 மின்சார பேருந்துகள் இறக்குமதி!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில், நிரோஷன் பெரேரா எழுப்பிய கேள்விக்கு எதிர்காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பேருந்துகளை சேவையில் உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நவீன வசதியுடன் கூடிய 200 மின்சார பேருந்துகளை போக்குவரத்து சேவைக்கு உட்படுத்துவதாக தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக, தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 பேருந்துகளை சேவையில் உட்படுத்துவதாகவும், அமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து 2017 ஆம் ஆண்டு முதல் பொது போக்குவரத்திற்காக இ-டிக்கெட் முறையை அறிமுகம் செய்ய முயற்சித்த போதிலும் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆனால் இந்த இ-டிக்கெட் திட்டத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பொது போக்குவரத்திற்காக இத்திட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!