மின்கட்டண குறைப்பு தொடர்பான யோசனை..

மின்கட்டண குறைப்பு தொடர்பான யோசனையை எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்குவதாக மின்சார சபை அறிவித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த யோசனை கிடைக்கப்பெற்ற பின்னர் அது தொடர்பில் மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன் பின்னர் மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான பரிந்துரை வழங்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரமளவில் மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!