தன்னை ஏமாற்றிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சும்மா விடமாட்டேன் என்று நடிகை விஜயலட்சுமி மீண்டும் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீமான் தன்னை காதலித்து, அவர் தேவைக்கு பயன்படுத்திவிட்டு அதன்பின் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அதன்பின், சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், சீமான் சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை, அவர் மீண்டு தன்னை ஏமாற்றிவிட்டார் என புகார் அளித்தார்.
அப்போது பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு அதன்பின் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இந்நிலையில், விஜயலட்சுமி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சீமான் இந்த வழக்கில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அனைத்தையும் மறைக்க முயற்சிக்கிறார். இத்தனை ஆண்டுகள் நான் கொடுத்த வழக்கு அப்படியே உள்ளது.
இதனால், நான் சென்னை வருகிறேன். அங்கு சீமானின் உண்மை முகத்தை வெளியில் கொண்டு வருவேன். இனி காவல்நிலையம், நீதிமன்றம் எல்லாம் கிடையாது. மீடியா முன்பு சீமான் மானத்தை வாங்குவேன்” என கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.