இளையராஜாவை தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை – கமல்ஹாசன் உருக்கம்

தனது மகளை இழந்து வாடும் சகோதரர் இளையராஜாவை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை என நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, தனது 47வது வயதில் காலமானார்.

அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் இளையராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனும் தனது இரங்கலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், ‘மனம் பதைக்கிறது. அருமை சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன்.

பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்‘ என தெரிவித்துள்ளார்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!