என்னுடைய திட்டங்களை நானே முடிவு செய்கிறேன்: ஜோதிகா

கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள்.

ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் சூர்யா குறித்து ஜோதிகா பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் ரசிகர்களும் ஜோதிகா கூறிய விஷயத்தை பார்த்து ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.

சூர்யா ஒரு சிறந்த கணவர். தனக்கு எல்லா விதத்திலும் மதிப்பு கொடுக்கிறார். நான் மீண்டும் நடிப்பதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தவரே சூர்யாதான் என பல மேடைகளில் ஜோதிகா புகழ்ந்திருக்கிறார்.

ஜோதிகா கடைசியாக சைத்தான் என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் சூர்யா குறித்து ஜோதிகா சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தென்னிந்திய திரையுலகம் பாலிவுட்டில் இருந்து வேறுபட்டது. பரஸ்பர மரியாதை, பாராட்டு, நட்பு இருந்தால் வாழ்க்கையை சமநிலைப்படுத்த முடியும். இவை அனைத்தும் ஒரு ஆணிடம் இருந்தால் பெண்களுக்கு பெரிய பாக்கியம்தான்.

நான் மீண்டும் நடிக்க வந்தபோதும், மும்பைக்கு சென்றபோதும் சூர்யா ஆதரவாக இருந்தார். என்னுடைய திட்டங்களை நான் முடிவு செய்கிறேன். அதேபோல் சூர்யாவின் திட்டத்தை நானும், அவரும் சேர்ந்தேதான் முடிவு செய்கிறோம்.

சூர்யா எப்போதுமே நல்ல கதையை தேர்ந்தெடுப்பார். அவரது எல்லா படங்களிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உண்டு” என்றார்.

Related posts

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!

தனுஷ் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

ஜெயம் ரவி -ஆர்த்தி டைவர்ஸ் உண்மையாம்! பிரபலம் கொடுத்த ஷாக்!