இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது அதிகப்படியான போட்டி நிலவி வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு ரேசில் இல்லாத டாடா மோட்டார்ஸ், தற்போது அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
இதேபோல் ஹூண்டாய்-யின் கிளை நிறுவனமான Kia அறிமுகமான சில வருடத்திலேயே பெரும் வர்த்தகப் பங்கீட்டை பிடித்துள்ளது.
MG மோட்டார்ஸ் தற்போது JSW உடன் இணைந்தது மூலம் அடுத்த 2 வருடத்தில் புதுப் புது மாடல்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும், மாருதி சுசூகி டோயோட்டா உடன் இணைந்த ர்லடிசனை கார்கள், எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யச் செய்து வருகிறது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில், இந்திய திரைப்பட உலகின் முக்கிய நட்சத்திரமான தீபிகா படுகோன்-ஐ தனது பிராண்ட் தூதராக நியமித்து, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஹூண்டாய் மோட்டார் இந்தியா.
ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் ஸ்டைலுக்கும், விற்பனை சாதனைகளுக்கும், வர்த்தகத்தில் தடம்பதிப்பதில் இலக்கணமாகத் திகழ்கிறது.
இந்த நிலையில், இந்நிறுவனத்திற்கு தீபிகா படுகோன்-ஐ பிராண்ட் தூதராகக் நியமித்து மூலம் கூடுதல் பலம் கிடைக்கும் எனத் தெரிகிறது.
பொதுவாகத் தீபிகா படுகோன் ஒரு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டர் ஒப்பந்தத்திற்கு 9-10 கோடி ரூபாய் அளவிலான தொகையை வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.
அதே வேளையில், ஹூண்டாய் போன்ற பெரிய பிராண்டின் தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் வேளையில் 12 கோடி ரூபாய் பெற்று இருக்க வாய்ப்புகள் உள்ளது.
மேலும், ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கார்களின் அறிமுகத்திற்கு, தீபிகாவின் புகழ் பெரிய அளவில் பயன்படும்.
இதேபோல், இந்தியாவில் பிற நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைக்கவும், புதிய வாடிக்கையாளரை ஈர்க்கும் ஹூண்டாய் முயற்சிக்கு தீபிகா படுகோனே முகமாகச் செயல்படுவார் என அந்நிறுவனம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.