கொழும்பில் மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு!

கொழும்பு – கோட்டையில் உள்ள பழைய அரச செயலகம் ஓன்றின் அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு துறைமுக நகர நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிர்மாண நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் கிட்டத்தட்ட ஆறு அடிக்கு கீழே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நிர்மாணப் பணி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன் இது தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!