அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!

போதைப்பொருள் விற்பனையை புதுச்சேரி அரசு தடுக்காததைக் கண்டித்து மனிதச் சங்கிலி போராட்டத்தை அதிமுக இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தியது.

புதுச்சேரி அண்ணா சாலையில் அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் மாநில செயலர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.

மனிதச் சங்கிலி போராட்டத்தின் போது மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா, கஞ்சா ஆயில் ஸ்டாம்ப், அபின், ஹெராயின்,பிரவுன் சுகர் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன.

புதுச்சேரி நகரப் பகுதியில் பப், ரெஸ்டோ பார்கள், கடற்கரைப் பகுதிகள், சுற்றுலாப் பயணிகள் குவியம் இடங்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் இரவு முழுவதும் நடைபெற்று வரும் ரெஸ்டோ பார்களை இரவு 11 மணியோடு மூட அரசு உத்தரவிட வேண்டும். மேலும் ரெஸ்டோ பார்களில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என போலீஸார் கண்காணிக்க வேண்டும்.

போதைப் பொருட்களை அரசு தடுக்கும் வரை தொடர் போராட்டங்களை அதிமுக நடத்தும். இவ்விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. சரியான நடவடிக்கை எடுக்காததாலும், இளைஞர்கள் எதிர்காலத்தை கருதியும் போராடுகிறோம்” என்றார்.

 

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!