என்ன தைரியத்தில் இப்படி பேசுகிறார்? திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை

நடிகை திரிஷாவை குறிப்பிட்டு மன்சூர் அலி கான் மோசமாக பேசியதற்கு நடிகை மாளவிகா மோகனன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் மன்சூர் அலி கான் லியோ படத்தில் நடிகை திரிஷாவுடன் தனக்கு காட்சிகள் வைக்கவில்லை என்றும், பாலியல் வன்புணர்வு போன்ற காட்சியை தான் எதிர்பார்த்ததாகவும் கூறியிருந்தார்.
மேலும் திரிஷாவை படக்குழு கண்ணிலேயே காட்டாமல் அழைத்து சென்றுவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நடிகை திரிஷா சமூக வலைதள பதியில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
அதில், “இப்படி ஒரு மனிதருடன் நான் எப்போதும் சேர்ந்து நடிக்க மாட்டேன். அவர் கூறியது மிகவும் அருவருப்பானது” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த விடயம் பூதாகரமான நிலையில் தற்போது நடிகை மாளவிகா மோகனன் தனது பதிவில் மன்சூர் அலி கானை கண்டித்துள்ளார்.
அவர், “பெண்களைப் பற்றி இந்த மனிதர் கொண்டிருக்கும் எண்ணங்களை நினைத்து பார்க்கவே அவமானமாக இருக்கிறது.
ஆனால் அதையும் மீறி என்ன தைரியத்தில் இதையெல்லாம் எந்தவித யோசனையும் இல்லாமல் பொதுவெளியில் பேசுகிறார்.
கொஞ்சமாவது அவமானப்படுங்கள் மன்சூர் அலி கான். என்னால் இதை நம்ப முடியவில்லை” என கொந்தளித்துள்ளார்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!