கோண்டாவிலில் வீடு முற்றுகை! – போதைப்பொருட்கள் மீட்பு..

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் வீடொன்றிலிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டிலிருந்து, 500 கிராம் கேரளக் கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், போதை மாத்திரைகள் 6, போதை மருந்தேற்ற பயன்படுத்தப்படும் ஊசிகள் ஆகியன மீட்கப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
50,000 ரூபா பணத்துடன் நேற்று திங்கட்கிழமை, யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் நீண்ட காலமாக கோண்டாவில் செபஸ்டியன் வீதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைதானவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேக நபரின் வீடு கோப்பாய் பொலிஸார் மற்றும் மோப்ப நாயுடன் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போதே அங்கிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், 24, 21 வயதுடைய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவர் போதைப்பொருள் வியாபாரம் உட்பட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!