எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது என வானிலை அவதானிப்பு நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்வரும் 29ம் திகதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி, பின்னர் வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது.
இதனால் எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம் 3ம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிகக் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
தற்போதைய கணிப்பின் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களூடாகவே நகரும் வாய்ப்புக்கள் உள்ளன – எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 comments