மொத்த ரவுடிகளையும் கட்சியில் சேர்த்திருக்கிறார்! அண்ணாமலையை தான் கைது செய்யனும் – ஆர்‌.எஸ்.பாரதி காட்டம்

நாகலாந்து மக்கள் நாய்க்கறி சாப்பிடுவது அவர்கள் கலாச்சாரம் என்று கவுகாத்தி நீதிமன்றமே ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அதை மேற்கோள் காட்டித்தான் நான் பேசினேன் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்‌.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாய்க்கறி சாப்பிடுவார்கள் என்று கூறி நாகலாந்து மக்களை இழிவுபடுத்திவிட்டார்‌. அதற்காக ஆர்.எஸ்.பாரதியை கைது செய்யவேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கு.அண்ணாமலை கூறியிருந்தார்.
இது குறித்த பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி “அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள குற்றப்பின்னணி கொண்ட அனைத்து ரவுடிகளையும் கட்சியில் இணைத்து, தமிழ்நாட்டின் அமைதியை குலைக்க முயலும் அண்ணாமலையை தான் கைது செய்ய வேண்டும்” என்று கூறினார்.
மேலும் அவர், உயர்நீதிமன்ற தீர்ப்பினை மேற்கோள் காட்டித் தான் பேசினேன் என்பதையும், யாருக்காகவும் எதற்காகவும் பின்வாங்க மாட்டோம் என்றும், நாங்கள் கலைஞர் கருணாநிதியிடம் அரசியல் கற்றவர்கள். ஆதலால் எதையும் சரியாகத் தான் செய்வோம் என்று கூறியுள்ளார்.
அத்துடன் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை கவனிக்க நேரமில்லாத ஆளுநருக்கு, திமுகவினர் மேடையில் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க மட்டும் நேரம் இருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
நாகா மக்களை புண்படுத்தும் விதமாக நான் பேசாதபோது ஆளுநர் ரவி அதை மிகைப்படுத்தி அரசியல் செய்கிறார். ஆளுநர் ரவி இனியாவது தன் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் இல்லையேல் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!