முடி உதிர்வது என்பது தற்போது ஆண் பெண் என இருபாலருக்குமே உள்ள பிரச்சினையாகும்.
பராம்பரியமாக தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும் என பெரியோர்கள் கூறுவது உண்டு.
அந்த வகையில் தேங்காய் எண்ணெயுடன் ஆமணக்கு எண்ணெயைக் கலந்து பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.
ஆமணக்கு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு மேல் தடவினால் முடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியம் மேம்படும்.
இந்த கலவையை சூடாக்கி பூசுவதன் மூலம் சிறந்த பலனை அடையலாம். முடி வளர்ச்சியை விரைவுபடுத்த கலவையில் ஒரு சிறிய அளவு ரோஸ்மெரி எண்ணெயையும் சேர்க்கலாம்.
இவை இரண்டையும் கலந்து பூசி 30 நிமிடங்கள் இருந்தால், இந்த கலவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தை அளிக்கும்.
அதன் பிறகு நீங்கள் அதை ஷாம்பூ போட்டு கழுவ வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை கலவையைப் பயன்படுத்தினால் சிறந்த பலனை அடையலாம்.