முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார, தனது பதவியை இன்று(பிப்.20) ராஜினாமா செய்தார்.
ராஜினாமா கடிதத்தை, கோட்டபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக சுகீஸ்வர பண்டாரா தெரிவித்தார்,
அந்த கடிதத்தில், சில தவிர்க்க முடியாத காரணத்தினாலும், அவர் மீது உள்ள மரியாதையாலும் தனிச் செயலாளர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது தாய் நாட்டிற்கு அங்கு வாழும் சகோதர மக்களுக்கு சேவை செய்வதே தனது நோக்கம். எனவே, தாய்நாட்டை பெருமையுடன் மீண்டும் கட்டி எழுப்பக்கூடிய அணியுடன் இணைந்து செயல்பட தயங்க போவதில்லை. புதிய அரசியல் வேலைத்திட்டத்துடன் ஒன்றினைத்து செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.