இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி: கமல்ஹாசன்

மக்களவை தேர்தல் குறித்து இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி வரும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதில், தமிழ்நாட்டில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் எங்கு போட்டியிடுவார்? அவர் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளது? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸ் போட்டியிடும் ஒரு சில தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால், திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்புக்காக திமுக தொண்டர்களே காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து படத்தின் ஷுட்டிங் முடிந்து திரும்பிய கமலிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி வரும்” என்று சொல்லி கிளம்பிவிட்டார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!