சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்பவர்களுக்கு பலாங்கொடையில் இருந்து நல்லதண்ணி வரை விசேட அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர் தர்ம ஸ்ரீ ஹரிச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளிக்கிழமைகளில் குறித்த விசேட பேருந்து, சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4.30 க்கு பலாங்கொடையில் இருந்து புறப்படும் பேருந்து பொகவந்தலாவ வீதியின் ஊடக நோர்வூட் பிரதான நகரத்தை தொடர்ந்து இரவு 8 மணிக்கு நல்லதண்ணியை சென்றடையும் என பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர் தர்ம ஸ்ரீ ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாது!

திருக்கேதீஸ்வர ஆலய மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்!

யாழில் முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்!