பால் பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..

இலங்கையில் பால் பண்ணைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து பால் பண்ணைகளையும் பதிவு செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாட்டில் 90,592 கால்நடை பண்ணைகள் காணப்படுகின்றது.

இந்நிலையில் 58,137 பண்ணைகள் மாத்திரமே கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பெரும்பாலானவை நாளொன்றுக்கு 100 லிட்டருக்கும் குறைவான பால் பெரும் பண்ணைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பதிவு செய்யப்படாத பண்ணையாளர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்களை பெறமுடியாத நிலை காணப்படுகிறது.

இந்த பின்னணியில், அடுத்த மாதத்தை கால்நடை பண்ணை பதிவு மாதமாக அறிவிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!