கடைசி வரை போராடிய கோலி.. இந்திய அணி படுதோல்வி..

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

செஞ்சூரியனில் நடந்த இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் குவித்தது. எல்கர் 185 ரன்களும், மார்கோ ஜென்சென் 84 ரன்களும் விளாசினர்.

ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

163 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

ரபாடா, பர்கர் மற்றும் ஜென்சென் ஆகியோரின் மும்முனை தாக்குதலை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் நிலைகுலைந்தனர்.

சுப்மன் கில் (26 ரன்கள்), விராட் கோலியை தவிர ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

6 ரன்களில் ஸ்ரேயாஸ் அவுட் ஆக, விராட் கோலி மட்டும் அணியை மீட்க போராடினார்.

ஆனால் 76 ரன்கள் எடுத்த நிலையில் கோலி கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, இந்தியா 131 ரன்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பர்கர் 4 விக்கெட்டுகளும், ஜென்சென் 3 விக்கெட்டுகளும், ரபாடா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!