பாஜக கூட்டணியில் இணைந்தார் ஜி.கே.வாசன்! சொன்ன காரணம்

மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி, பாஜக கூட்டணியுடன் இணைவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக பாஜக கூட்டணியில் இணைந்துள்ளோம். நாளை பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் நானும் பங்கேற்கிறேன். தமிழர்களை மத்திய பாஜக அரசு விரும்புகிறது.

தொகுதிப்பங்கீடு பேச்சுவாரத்தை விரைவில் நடைபெறும். வளமான பாரதம் அமையம் கட்சிகள் அனைத்தும் பாஜக கூட்டணியில் இணையவேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் கொள்கை வேறு, பாஜக கொள்கை வேறு, இது போன்ற சூழலில் ஜி.கே.வாசன் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால், அவர் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் சிலரே அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

 

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!