கழட்டி விட்ட காதலி! முதன் முறையாக பேசிய விக்னேஷ் சிவன்

நடிகர் விக்னேஷ் சிவன் தனது காதலி குறித்து முதல் முறையாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில், “நான் 9 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்தேன். அந்த பெண் மிகவும் மாடர்ன்.

என் அம்மா ஒரு காவல்துறை அதிகாரி. அதுபோன்ற சூழலில் ஒரு முறை என் அம்மாவை இருவருக்கு சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்போது, அவள் டீ-சர்ட்-ஜீன்ஸ் அணிந்து மிகவும் மாடர்னாக வந்திருந்தாள். அவள் நடந்துகொண்ட விதம் எதுவும் என் அம்மாவுக்கு பிடிக்கவில்லை.

அவளுக்கு எங்கள் வீட்டில் சில விஷயங்கள் பிடிக்கவில்லை. உதாரணமாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால், எங்கள் வீட்டில் ரசம் ஒரு கரண்டடியில் எடுத்தால், அதே கரண்டியை வைத்து சாம்பாரையும் எடுப்பார்கள். ஆனால் அது எனது காதலிக்கு பிடிக்கவில்லை.

இதுபோல் பல விஷயங்கள் நடந்ததால் இருவரும் இறுதியில் பிரிந்துவிட்டோம்” என்றார்.

விக்னேஷ் சிவனின் இந்த காதல் கதையை கேட்ட நெட்டிசன்கள், “இதுவும் ஒரு வகையில் நல்லதுதான், இல்லையென்றால் நயன்தாரா உங்களுக்கு கிடைத்திருப்பாரா” என்று அவருக்கு வாழ்த்துகளையே கூறி வருகின்றனர்.

Related posts

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!

தனுஷ் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

ஜெயம் ரவி -ஆர்த்தி டைவர்ஸ் உண்மையாம்! பிரபலம் கொடுத்த ஷாக்!