வடக்கின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு – எரிக் சொல்ஹெய்ம் உறுதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கும் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், இடையிலான விசேட சந்திப்பு  நேற்று  கொழும்பில் நடைபெற்றது.
குறித்த சந்திப்பில் வட மாகாணத்தின் இடர் முகாமைத்துவம், மக்களின் அன்றாட வாழ்வியல் நிலை, காலநிலை, பொருளாதாரம், வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி ஆகிய விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆளுநரால் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கையின் வளர்ச்சிக்கான பசுமைத் திட்டங்களை முன்னெடுப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக  தெரிவித்துள்ளார்.
மேலும், சூரிய, காற்றாலை மற்றும் நீர்மின் உற்பத்திக்கான வளங்கள் இலங்கையில் காணப்படுவதால், பச்சை ஹைட்ரஜன் திட்டத்தை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும்,  எரிக் சொல்ஹெய்ம், கௌரவ ஆளுநரிடம் உறுதியளித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!