இலங்கையில், இலவச விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாட்டவர்களுக்கே இது திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி வரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இராஜதந்திர, உத்தியோகபூர்வ, பொது அலுவல்கள் மற்றும் ஆரம்ப கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் குறித்த நாடுகளின் பிரஜைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்டணம் இன்றி இலவசமாக விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
1 comment