ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட நான்கு சட்டமூலங்கள் இன்றுமுதல் நடைமுறைக்கு!

பாராளுமன்றத்தில் அண்மையில்  நிறைவேற்றப்பட்ட  சட்டமூலங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அனுமதி வழங்கினார்.
இதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 27ம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டமூலம், ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டமூலம் என்பவற்றில் சபாநாயகர் தனது கையொப்பமிட்டார்.
இதன்படி,  மேற்படி சட்டமூலங்கள் இன்று  முதல் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!