டில்லியில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கடந்த மே 1ம் தேதி டில்லியில் உள்ள 150க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. பின்னர் அது புரளி என கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், டில்லியில் உள்ள தீப் சந்த் மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். டில்லி போலீசார் விசாரணையைத் துவங்கி உள்ளனர்.
நான்கு மருத்துவமனைகளுக்கு போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மிரட்டல் விடுத்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.