பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு பிணை..

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில், மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை நேற்று வாழைச்சேனை நீதிமன்றில் இடம்பெற்ற போது இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைவாக, வாழைச்சேனை பொலிஸாரால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து வாழைச்சேனை நீதவான் ரிஸ்வான் சந்தேக நபர்கள் நால்வருக்கும் பிணை வழங்கினார்.

குறித்த வழக்கு மீண்டும் ஜனவரி 1ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த நவம்பர் 27ம் திகதி மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வில் போது
மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட நால்வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!