விளக்கேற்றும் போது தீப்பற்றியதில் முன்னாள் அமைச்சர் மருமகள் உயிரிழப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் தீ விபத்தில் சிக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தருமபுரி மாவாட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்தவர் பூர்ணிமா (30).

இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் மருமகள் ஆவார்.

கடந்த 18ஆம் திகதி பாலக்கோட்டில் உள்ள தனது வீட்டில் பூர்ணிமா விளக்கேற்றும்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பற்றியுள்ளது.

இதில் தீக்காயம் ஏற்பட்ட அவர், உடனடியாக குடும்பத்தினரால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!