இங்கிலாந்துக்கு எதிராக 3வது டெஸ்டில் சதம் விளாசிய ஜெய்ஸ்வாலை, முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 104 ரன்கள் விளாசினார்.
முன்னதாக அவர் இரண்டாவது டெஸ்டில் 209 ரன்கள் எடுத்து பாரிய சாதனை படைத்திருந்தார்.
தனது அபாரமான ஆட்டத்தினால் ஜெய்ஸ்வால் இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக உருவெடுத்துள்ளார்.
இதன்மூலம் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் அவர் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
அந்த வகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய்ஸ்வாலை வாழ்த்தியுள்ளார்.
அவரது பதிவில், ‘இந்திய சூழ்நிலையில் ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தில் ஒரு பலவீனத்தையும் நான் காணவில்லை.
வெளிநாட்டு மண்ணில் ரன் குவிப்பதுதான் அவருக்கு பாரிய சவால். உங்கள் கிரிக்கெட் வாழ்வின் முடிவில் சிறந்த வீரராக இருப்பீர்கள் மற்றும் வெளிநாட்டு மண்ணில் எந்த சூழலிலும் நீங்கள் சதம் அடிப்பீர்கள்.
மேலும், கடந்த இரண்டு வாரங்களாக ஜெய்ஸ்வாலை மிக உன்னிப்பாகப் பார்த்தால், அவர் எல்லா இடங்களிலும் 100 ரன்களை பெற முடியும்.
ஒருநாள் அவர் சிறப்பான வீரராக விளங்குவார் என்று நினைக்கிறேன்!’ என தெரிவித்துள்ளார்.