மூன்றாவது முறையாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு விமானங்கள்

ஜப்பானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட மூன்றாவது சம்பவம் நடந்தது.

ஒசாகாவில் இடாமி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மட்சுயமா நகருக்கு செல்ல விமானம் ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது.

அப்போது ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று புகுவோகாவில் இருந்து வந்து இடாமி விமான நிலையத்தில் தரை இறங்கியது.

ஆனால், மட்சுயமா செல்ல தயாரான விமானத்தின் மீது அந்த விமானம் நேருக்கு நேர் மோதியது.

இதில் இரண்டு விமானங்களின் முன்பக்க இறக்கைகளும் சேதம் அடைந்தன. எனினும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு, விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த விபத்து குறித்த விசாரணையில், விமான கட்டுப்பாட்டு அறையின் தவறான சமிக்ஞைகளால், ஆல் நிப்பான் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும்போது எதிரே இருந்த விமானத்தின்மீது மோதியுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தினால் விமான சேவை அங்கு தடைபட்டது.

ஏற்கனவே, கடந்த மாதம் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.

அதேபோல் கடந்த 16ஆம் திகதி, நியூ சிந்தோஸ் விமான நிலையத்தில் தென்கொரிய விமானம் ஒன்று, கேத்தே பசிபிக் விமான நிறுவனத்தின் விமானத்துடன் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த நிலையில் தான் இடாமி விமான நிலையத்தில் மூன்றாவது சம்பவமாக இரு விமானங்கள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!