உணவுப் பொருட்களின் விலைளும் அதிகரிப்பு!!

உணவுப் பொருட்களின் விலைகள் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் இந்த விலை அதிகரிப்பு ஏற்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் அதிகரிப்பைக் கொண்டே, இந்த விலை அதிகரிப்பு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தையில் அரிசி, மரக்கறிகள், இறைச்சி, மீன், முட்டை உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பால் எதிர்வரும் நாட்களில் பிரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!