உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சி!

அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த பறக்கும் டாக்ஸி சேவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 350 எமிரேட்ஸ் திர்ஹாம் அறவிடப்படவுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கக்கூடிய பறக்கும் டாக்ஸி சேவையானது சாதாரண பயணத்தில் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் எடுக்கும் தூரத்தை 10 நிமிடங்களில் பூர்த்தி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த விமான நிறுவனம் ஒன்றின் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்த டாக்ஸி சேவை, நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கபப்டுகின்றது.

இந்த பறக்கும் சேவையால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்றும் துபாய் நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நகரம் சுமார் 70% குறுகிய பயணங்களுக்கு 100 முதல் 500 மீட்டர் உயரத்திலும், நீண்ட பயணங்களுக்கு 1000 மீட்டர் உயரத்திலும் பறக்கும் டாக்ஸி சேவை திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் டாக்சிகளில் Luggage Packing செய்வதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!