அடையாளம் தெரியாத நபர்களால் வெலிகம பகுதியில் துப்பாக்கிச்சூடு பிரயோகம்..

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்ற பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் 42 மற்றும் 52 வயதுடைய தெனிப்பிட்டிய மற்றும் வெலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற மீன் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் எனவும், மற்றையவர் அதே மீன் விற்பனை நிலையத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!