இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட தந்தையும் மகனும்..

தனமல்வில பகுதியில் ஆண் ஒருவரும் அவரது மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் 15 வயது சிறுவனும் 56 வயதுடைய தந்தையுமே தாக்கப்பட்டுள்ளது.

குறித்த தந்தையும் மகனும் இரும்பு கம்பியினால் தாக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காயமடைந்த இருவரும் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக தந்தை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இரண்டு நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றைய சந்தேக நபரை தேடி தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!