பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உச்சபட்ச துரோகம் செய்துவிட்டதாக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாட்டில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், கட்சிகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.
ஆனால், பயங்கர நெருக்கமாக இருந்த அதிமுக-பாஜக கூட்டணி இந்த முறை எதிரும், புதிருமாக இருக்கின்றனர். இதனால், இந்த தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி இருக்காது என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அதிமுகவின் பல தலைவர்களும் இதை அதிகாரப்பூர்வமாக கூறிவிட்டனர்.
இந்நிலையில், இது குறித்து சிவகங்கை வந்த ஓபிஎஸ் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “4, 5 ஆண்டுகள் பாஜக ஆதரவில் ஈபிஎஸ் ஆட்சி செய்துவிட்டார். பாஜக ஆதரவில்தான் ஆட்சி நடந்தது என்பது நான் உள்ளிட்ட பொதுமக்கள் பலருக்கும் தெரியும்.
ஆனால், இப்போது பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதுதான் பாஜகவுக்கு ஈபிஎஸ் செய்யும் உச்சபட்ச துரோகம்” என விமர்சித்துள்ளார்.