பாஜகவுக்கு ஈபிஎஸ் செய்யும் உச்சபட்ச துரோகம்: ஓபிஎஸ்

பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உச்சபட்ச துரோகம் செய்துவிட்டதாக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாட்டில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், கட்சிகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.

ஆனால், பயங்கர நெருக்கமாக இருந்த அதிமுக-பாஜக கூட்டணி இந்த முறை எதிரும், புதிருமாக இருக்கின்றனர். இதனால், இந்த தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி இருக்காது என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அதிமுகவின் பல தலைவர்களும் இதை அதிகாரப்பூர்வமாக கூறிவிட்டனர்.

இந்நிலையில், இது குறித்து சிவகங்கை வந்த ஓபிஎஸ் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “4, 5 ஆண்டுகள் பாஜக ஆதரவில் ஈபிஎஸ் ஆட்சி செய்துவிட்டார். பாஜக ஆதரவில்தான் ஆட்சி நடந்தது என்பது நான் உள்ளிட்ட பொதுமக்கள் பலருக்கும் தெரியும்.

ஆனால், இப்போது பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதுதான் பாஜகவுக்கு ஈபிஎஸ் செய்யும் உச்சபட்ச துரோகம்” என விமர்சித்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!