இந்தியாவை காலி செய்ய அபுதாபி பறந்த இங்கிலாந்து வீரர்கள்!

இந்திய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள போட்டிகளில் எப்படியாவது வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என இங்கிலாந்து வீரர்கள் அபுதாபி பறந்துள்ளனர்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இதில், இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளுமே 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி, வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து வீரர்கள் திடீரென்று இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதற்கான காரணம் தெரியாமல் இருந்தது.

தற்போது காரணம் வெளியாகியுள்ளது. அதாவது இந்த போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் இடைவெளி உள்ளது. அந்த ஒரு வார இடைவெளியில் அபுதாபிக்கு சென்று, அங்கு தீவிர பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளனர். பயிற்சியுடன் புத்துணர்ச்சி வகுப்புகளும் அங்கு நடக்கிறது.

இதனால், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து வீரர்கள் புத்துணர்ச்சியுடன் திரும்ப வேண்டும் என்பதற்காக அபுதாபி சென்றுள்ளனர்.

இது பலன் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!