இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்துக்கு கிடைத்திருக்கும் சான்ஸ்!

இந்திய அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளதாக, அந்த அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர் பிராட் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

 

இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளுமே 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இதைத் தொடர்ந்து 3வது டெஸ்ட் போட்டி, வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.

இது குறித்து பேசிய இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர் பிராட், “இந்த தொடரில் இருந்து கோலி முற்றிலுமாக விலகியுள்ளார். அவர் இந்திய அணியில் இல்லாதது இங்கிலாந்து அணிக்குதான் சாதகம் என்று சொல்வேன்.

முதல் 2 போட்டிகளிலும் அவர் இல்லாமல்தான் இந்தியா விளையாடியது. ஆனால், அடுத்து வரும் போட்டிகள் இந்தியாவுக்கு முக்கியம் என்பதால் நெருக்கடியில் இருப்பார்கள்.

இந்த நெருக்கடியை கோலி சிறப்பாக கையாள்வர். எனவே, அவர் தற்போது இல்லை என்பதால், இது இங்கிலாந்துக்கு கிடைத்துள்ள ஒரு வாய்ப்பு” என்றார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!