சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவசர நிலைமை ஒத்திகை..

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவசர நிலைமை ஒத்திகை ஒன்று நடைபெற்றுள்ளது.

இதனை எதிர்பார்க்காத பயணிகள் பலரும் முதலில் பீதியடைந்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த ஒத்திகையின் போது தீவிரவாதிகள் உட்புகுதல், தீயணைப்பு, பேரிடர் போன்ற அவசர காலங்களில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த பயிற்சிகள் இடம்பெற்றன.

மேலும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தை தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அவசரமாக அணைக்கும் ஒத்திகையும் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் கீழே விழுந்து கிடந்த சிலரை மருத்துவக் குழுவினர் காப்பாற்றும் ஒத்திகைகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!