இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
மக்களவை தேர்தல் நெருங்குவதால், இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்பரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர், “காங்கிரசின் அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் வரும் சமயத்தில் வேண்டும் என்றே வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம். பொதுமக்களிடமிருந்து நிதி பெறுவதற்கு உருவாக்கப்பட்ட கணக்குகளும் முடுக்கப்பட்டுள்ளது” என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பாஜகவின் திட்டமிட்ட சதி, வேண்டும் என்றே காங்கிரசின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறையை வைத்து முடக்கியுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் X தளத்தில் பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.