இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 லட்சம் முட்டைகள் நாட்டில் கையிருப்பில் உள்ளது. எனவே, முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
சதொச கடைகளுக்கு நாளாந்தம் சுமார் 5 இலட்சம் முட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, பண்டிகைக் காலங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.