இலங்கை வீரரின் மாயாஜால சுழலில் சுருண்ட துபாய் கேபிடல்ஸ்

இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் நடந்த போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் துபாய் கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

துபாய் கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் குர்பாஸ் 9 ரன்களும், கேப்டன் வார்னர் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த பென் டன்க் 8 ரன்னில் சாம்ஸ் ஓவரிலும், பில்லிங்ஸ் 9 ரன்னில் தீக்ஷணா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் இலங்கை வீரர் தீக்ஷணாவின் பந்துவீச்சில் துபாய் அணி ரன் எடுக்க தடுமாறியது. அத்துடன் விக்கெட்டுகளையும் இழந்தது.

அதேபோல் சாம்ஸ் மறுமுனையில் வேகப்பந்துவீச்சில் மிரட்டினார். இதனால் துபாய் கேபிடல்ஸ் 18.2 ஓவரில் 104 ரன்களுக்கு சுருண்டது.

ரஸா 22 (25) ரன்களும், வான்டெர் மெர்வ் 21 (14) ரன்களும் எடுத்தனர். தீக்ஷணா 4 விக்கெட்டுகளும், டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ், ஒரு விக்கெட் இழப்புக்கு 13.1 ஓவரில் 105 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜான்சன் சார்லஸ் 43 (33) ரன்களும், டிக்வெல்ல 37 (30) ரன்களும் எடுத்தனர். இது ஷார்ஜா அணிக்கு 3வது வெற்றி ஆகும்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!